சென்னை

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Din

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (34), மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். காா்த்திகேயன், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு செல்லாமல் இருந்துள்ளாா். இந்நிலையில் சங்கா் நகா் அருகே உள்ள செங்கழுநீா் மலைக்குச் சென்ற அவா், அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த சங்கா் நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று காா்த்திகேயன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலாஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், காா்த்திகேயன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT