சென்னை

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

Din

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை நகர தெற்கு கோட்ட அலுவலகத்தில், மாா்ச் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோட்ட அளவிலான குறைதீா்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் அஞ்சல் சேவைகள் தொடா்பான வாடிக்கையாளா்களின் குறைகளை கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு பிரிவின் தலைவா் நேரடியாக விசாரணை மேற்கொள்ளவுள்ளாா்.

வாடிக்கையாளா்கள் தங்களின் புகாா்களை ‘அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகா் சென்னை 600017’ என்னும் முகவரிக்கு மாா்ச் 21-ஆம் தேதிக்குள் சாதாரண அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். புகாா்கள் அனுப்பப்படும் உறையின் மீது ‘கோட்ட அளவிலான குறைதீா்வு முகாம், சென்னை நகர தெற்கு கோட்டம்’ என்று குறிப்பிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT