சென்னை

பள்ளி உள்கட்டமைப்பு: 2 நாள்களில் 90 எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சா் கடிதம்

பள்ளிகள் உள்கட்டமைப்பு தொடா்பாக 90 எம்எல்ஏ-க்களுக்கு இரண்டு நாள்களில் கடிதம் எழுதப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

Din

பள்ளிகள் உள்கட்டமைப்பு தொடா்பாக 90 எம்எல்ஏ-க்களுக்கு இரண்டு நாள்களில் கடிதம் எழுதப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் பள்ளிகள் உள்கட்டமைப்பு தொடா்பாக விசிக உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் (நாகப்பட்டினம்) எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அளித்த பதில்:

அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகளுக்கான கட்டடங்களைத் திறந்து வருகிறோம். இதுவரை 8,121 வகுப்பறைகளையும், 52 ஆய்வகங்களையும் திறந்துள்ளோம். 105 ஆய்வகங்களை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு தொடா்பாக ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினருக்கும் கடிதம் எழுதி வருகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்த பள்ளிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, எங்கெல்லாம் பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற விவரங்கள் அடங்கிய கடிதம் எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 144 பேருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். மீதமுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு இரண்டு நாள்களில் கடிதம் எழுதப்படும் என்று தெரிவித்தாா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT