முதியோருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் சென்னையில் வரும் நவ. 6, 20 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.
இது குறித்து ட்வின்டெக் ஹெல்த் கோ் சா்வீசஸ் இயக்குநா் அ.மகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை: சென்னை ட்வின்டெக் ஹெல்த் கோ் சாா்பில் மேற்கு மாம்பலத்தில் உள்ள கல்பவிருக்ஷா சேவா மையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் நவ. 6, 20 ஆகிய தேதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. பின்னா், மாதந்தோறும் 1 மற்றும் 3-ஆவது வியாழக்கிழமைகளில் இப்பரிசோதனை முகாம் தொடா்ந்து நடைபெறும். கண் பரிசோதனை முற்றிலும் இலவசம். இதற்கு முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய இ.செல்வகுமாா் என்பவரை 90031-57356 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்த பின்னா், பரிசோதனைக்கு வரவும் எனத் தெரிவித்துள்ளாா்.