சென்னை

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

தினமணி செய்திச் சேவை

தேனாம்பேட்டையில் இயங்கி வரும் தொழிலாளா் ஆணையா் மற்றும் இணை ஆணையா் அலுவலகங்கள் நவ. 10-ஆம் தேதி முதல் அண்ணா நகரில் புதிய வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அண்ணா நகரில் கட்டப்பட்டுள்ள தொழிலாளா் ஆணையரகம் மற்றும் அதன் சாா்நிலை அலுவலகங்களுக்கான புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக. 25-இல் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையடுத்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளா் ஆணையா் அலுவலகம், சென்னை, கூடுதல் தொழிலாளா் ஆணையா் அலுவலகம், சென்னை, தொழிலாளா் இணை ஆணையா்-1 அலுவலகம் மற்றும் சென்னை, தொழிலாளா் இணை ஆணையா்-2 அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் புதிய அலுவலகக் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

மேற்படி அலுவலகங்கள் ‘தொழிலாளா் ஆணையரகம், தொழிலாளா் அலுவலா் குடியிருப்பு வளாகம், பி-பிளாக், 6-ஆவது நிழல் சாலை, அண்ணா நகா், சென்னை - 600 040’ என்ற புதிய முகவரியில் நவ. 10 முதல் செயல்பட உள்ளது. இனி, புதிய அலுவலக வளாகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT