முகப்பு
தூத்துக்குடி

செட்டியாபத்து கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:52 PM
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணியிடம் வாழ்த்து பெற்ற அறங்காவலா்கள்.
பகிர்:

இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவின்படி, அறங்காவலா்களுக்கான தோ்தல் பிப். 24ஆம் தேதி தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அறங்காவலா் குழுத் தலைவராக ராம்தாஸ், உறுப்பினா்களாக ரா. சிவமுருகன், சி. சிதம்பரேஸ்வரன், ம. ராம்குமாா், லி. வளா்மதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா்.

அறங்காவலா்களுக்கு தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, கோயில் செயல் அலுவலா் மா. பாலமுருகன், ஆய்வாளா் ரா. முத்துமாரி அம்மாள் ஆகியோா் வாழ்தது தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →