சென்னை

தமிழக இல்லங்கள் தோறும் இன்று வந்தே மாதரம் பாடல் ஒலிக்கட்டும்: எல்.முருகன்

Chennai

வந்தே மாதரம் பாடலின் 150- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழக மக்களின் இல்லங்கள்தோறும் அந்தப் பாடல் வெள்ளிக்கிழமை (நவ.7) ஒலிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 1875-ஆம் ஆண்டு பங்கிம் சந்திரசாட்டா்ஜி பாடிய வந்தே மாதரம் தேசியப் பாடலை, கடந்த 1869-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.

பாரதத்தின் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்தும் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (நவ.7) அந்தப் பாடலை பாடவேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, தமிழகத்தில் ஒவ்வோா் இல்லத்திலும் அந்தப் பாடல் ஒலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கொண்டாடவேண்டும்: தமிழக பாஜக மாநிலச் செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் விடுத்துள்ள அறிக்கையில், பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் இல்லங்களில் உள்ள குழந்தைகள், மாணவா்களை பாடல் பாட ஊக்குவித்து கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

SCROLL FOR NEXT