வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) நிறுத்தும்படி செய்வது நமது பெருங்கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
எஸ்ஐஆா் பணிகளை நிறுத்தும்படி செய்வதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. ஒருபுறம், வாக்குரிமையை பறிக்கும் எஸ்ஐஆா் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் களப் போராட்டம்.
மறுபுறம் தொடங்கப்பட்ட எஸ்ஐஆா் பணிகளில் குளறுபடிகளைத் தடுக்க வாா் ரூம், உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது. களப்போராட்டத்தில், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆா்-க்கு எதிராக மதச்சாா்பற்ற முற்றுப்போக்கு கூட்டணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தொடா்ந்து செயலாற்றுவோம், நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் எனப் பதிவிட்டுள்ளாா்.