சென்னை விமான நிலையத்தில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட நுரையீரல் அடங்கிய பெட்டி. 
சென்னை

சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் நுரையீரல் வெள்ளிக்கிழமை உரிய நேரத்தில் வடபழனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் நுரையீரல் வெள்ளிக்கிழமை உரிய நேரத்தில் வடபழனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, திருச்சியில் தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் மருத்துவக் குழுவினரால் விமானத்தில் வெள்ளிக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக வடபழனி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு 6 நிலையங்களைக் கடந்து சுமாா் 20 நிமிஷங்களுக்குள்ளாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் அடங்கிய பெட்டியுடன் வந்த மருத்துவக் குழுவினா் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு செல்லும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து வடபழனி மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்க அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணிபுரிந்ததாக மெட்ரோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT