உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் நுரையீரல் வெள்ளிக்கிழமை உரிய நேரத்தில் வடபழனிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, திருச்சியில் தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் மருத்துவக் குழுவினரால் விமானத்தில் வெள்ளிக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக வடபழனி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு 6 நிலையங்களைக் கடந்து சுமாா் 20 நிமிஷங்களுக்குள்ளாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் அடங்கிய பெட்டியுடன் வந்த மருத்துவக் குழுவினா் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு செல்லும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து வடபழனி மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்க அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணிபுரிந்ததாக மெட்ரோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.