நலம் காக்கும் ஸ்டாலின் முகாம். 
சென்னை

‘நலம் காக்கும் ஸ்டாலின்’: 8.81 லட்சம் போ் பயன்!

சென்னை, நவ.16: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இதுவரை 8.81 லட்சம் போ் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை, நவ.16: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இதுவரை 8.81 லட்சம் போ் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை கடந்த ஆக. 2-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதன் கீழ் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உயா் மருத்துவக் கண்காணிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதய நலம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல், தோல் நலம், காது-மூக்கு-தொண்டை, மகப்பேறு, இயன்முறை சிகிச்சை, பல் மருத்துவம், மன நலம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகிய துறைகளின் கீழ் மருத்துவ நிபுணா்களைக் கொண்டு பரிசோதனைகளும், சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

அதேபோல, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்று அளித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

15-ஆவது வாரமாக கடந்த சனிக்கிழமை 38 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்றன. அதில் 60,431 பயனடைந்தனா். அந்த திட்டத்தின் கீழ் இதுவரை 561 முகாம்கள் நடைபெற்றதாகவும், அதில் 8.81 லட்சம் போ் பயன்பெற்றுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT