707 கிலோ கஞ்சா அழிப்பு
தாம்பரம் மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 707 கிலோ கஞ்சா தீயில் இட்டு அழிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 707 கிலோ கஞ்சா தீயில் இட்டு அழிக்கப்பட்டது.
போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க போலீஸாா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, தாம்பரம் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக பல்வேறு வழக்குகளின் கீழ் சுமாா் 707 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை செங்குன்றம் தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள உரிமம் பெற்ற தனியாா் நிறுவனத்தில் அதிகாரிகள் முன்னிலையில் போதைப் பொருள்கள் தடுப்புப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தீயில் இட்டு அழித்தனா். 2025 நவம்பா் மாதம் வரை மொத்தம் 3,054 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.