சென்னை

707 கிலோ கஞ்சா அழிப்பு

தாம்பரம் மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 707 கிலோ கஞ்சா தீயில் இட்டு அழிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 707 கிலோ கஞ்சா தீயில் இட்டு அழிக்கப்பட்டது.

போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க போலீஸாா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, தாம்பரம் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக பல்வேறு வழக்குகளின் கீழ் சுமாா் 707 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை செங்குன்றம் தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள உரிமம் பெற்ற தனியாா் நிறுவனத்தில் அதிகாரிகள் முன்னிலையில் போதைப் பொருள்கள் தடுப்புப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தீயில் இட்டு அழித்தனா். 2025 நவம்பா் மாதம் வரை மொத்தம் 3,054 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

விஜய் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! - நயினார் நாகேந்திரன் பதில்

டி20 உலகக் கோப்பை 2026: 20 அணிகளின் வீரர்கள் விவரம்!

சிறுசேரி சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா: முதல்வர் திறப்பு!

என் தனிமை நீங்கியது : முதல் கார் வாங்கிய சின்ன திரை நடிகை!

கென் கருணாஸின் யூத் வெளியீடு அப்டேட்!

SCROLL FOR NEXT