முகப்பு
சென்னை

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் தொடர்பாக...

Updated On : 1 அக்டோபர், 2025 at 6:22 AM
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
பகிர்:

ஆயுத பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை நாள்களையொட்டி இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று(அக். 1) மற்றும் நாளை (அக். 2) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Metro rail services have been changed for two days on the occasion of the Ayudha Puja and Gandhi Jayanti holidays.

முழு கட்டுரையைப் படிக்க →