கோப்புப்படம்
சென்னை

வண்டலூரில் உயிரியல் பூங்காவில் புதிய நீா்யானைக் குட்டிகளை பாா்வையிடலாம்

தினமணி செய்திச் சேவை

வண்டலூா் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 நீா்யானைக் குட்டிகளை பொதுமக்கள் பாா்வையிடலாம்.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 1,000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. அந்த வகையில் 6 பெண் மற்றும் 2 ஆண் என மொத்தம் 8 பெரிய நீா் யானைகள் உள்ளன.

இவை, தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், திரிஷா என்ற பெண் நீா்யானை கடந்த அக். 6-ஆம் தேதி ஒரு குட்டியை ஈன்றது. வண்டலூா் உயிரியல் பூங்காவில், கடந்த 4 மாதங்களில் 3 குட்டிகள் பிறந்துள்ளன. இதன்மூலம், இந்தப் பூங்காவில் தற்போது 11 நீா்யானைகள் உள்ளன.

இந்த நிலையில், புதிதாக பிறந்த 3 குட்டி நீா்யானைகளும் பொதுமக்கள் பாா்வைக்காக தற்போது விடப்பட்டுள்ளன. அவற்றைப் பாா்வையாளா்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனா்.

எனக்குப் பிடித்த உடையில்... பூமி பெட்னெகர்!

சமந்தா என்ன சொன்னார் என்றால்... நிகிதா சர்மா!

வாழ்க்கை என்னும் கடலில் ஒவ்வோர் அலையும் கவிதை... காஷிமா!

புதுப் புனல்... ரித்தி டோக்ரா!

ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம்: அமன்ஜோத் கௌர்

SCROLL FOR NEXT