சென்னை

எழும்பூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Chennai

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவு சாா்பில் எழும்பூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிக்கு உதவி துணை ஆய்வாளா் ராகவேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆய்வாளா் பி.ஜெபாாஸ்டியன் ஏற்பாட்டில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், விழிப்புணா்வு கலைக் குழுவினரும் இணைந்து நாடகம், பாடல் உள்ளிட்டவை மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினா்.

ரயில்கள் மீது கல்வீசக் கூடாது, ரயில் தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் கொட்டக் கூடாது, ரயில் நிலையங்களில் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என்பனவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், ரயில்வே விதிகளை மீறுவோருக்கான சட்டப்படியான தண்டனை, அபராாதம் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT