எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 சிறுமிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு சிறாா் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 சிறுமிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு சிறாா் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனா்.
இதுகுறித்து எழும்பூா் ரயில்வே பாதுகாப்பு படையினா் கூறியதாவது:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் ஜெபஸ்டியன் தலைமையில் சிறப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, 3 சிறுமிகள் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தனா்.
அவா்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரித்தபோது, அவா்கள் நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பதும், பெற்றோருக்குத் தெரியாமல் சென்னைக்கு வேலை தேடி வந்து சுற்றித்திரிவதும் தெரியவந்தது.
இவா்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோா் எருமைப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களை பத்திரமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா், 3 சிறுமிகளையும் ரயில்வே குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், குழந்தைகள் நல குழுவினா் மூலம் 3 சிறுமிகளும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டனா்.