சென்னை உயா்நீதிமன்றம் 
சென்னை

சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா்.

அதன்படி, நீதிபதிகள் என்.செந்தில்குமாா் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். அவா்களுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்வில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

கல்லூரி மாணவி தற்கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது வழக்கு

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

அறநெறி கொண்ட சமுதாயத்தை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கால்நடை பல்கலை.களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு: அஸ்ஸாம் பல்கலை. துணைவேந்தா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT