மின்சார ரயில்கள்  கோப்புப்படம்
சென்னை

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி நாளை மின்சார ரயில்கள் இயங்கும்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் புகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (அக்.2) முழுமையாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் புகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (அக்.2) முழுமையாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் வியாழக்கிழமை (அக்.2) சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை இடையிலும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயும் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து சென்னை புகா் பகுதி மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, புதன்கிழமை (அக்.1) புகா் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்.2 ஆம் தேதியும் அதே அட்டவணையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., பிகார் மக்களை அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பாஜக முயற்சி! காங்கிரஸ்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT