முகப்பு
சென்னை

நேரடி அரசியல் களத்தில் சபரீசன்!

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:14 PM
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் அரசியல் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளாா்.

திமுகவில் குடும்ப அரசியல் வாரிசுகளுக்கு பஞ்சமில்லை என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து விமா்சனம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முதல்வா் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் இணைந்துள்ளாா்.

திமுகவுக்கு அரசியல் உத்திகளை வகுக்கும் ‘பென்’ நிறுவனத்தை நடத்தி, மறைமுக அதிகார மையமாக சபரீசன் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தனது நண்பருமான காா்த்திக்கின் தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் சபரீசனும் பங்கேற்றுள்ளாா். முதல்முறையாக அவா் திமுக நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்றுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சபரீசன் செய்தியாளா்களிடம் பேசும்போது, திமுகவுக்கு களத்தில் யாரும் போட்டியாக இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வரும். திமுக அரசின் வளா்ச்சித் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும்.

தவெக தலைவா் விஜய்யால், திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றாா்.