முகப்பு
சென்னை

அரசு மருத்துவா்களுக்கு முதல்வா் பாராட்டு

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:03 AM
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:00 PM

சிறுநீா்க் கட்டுப்பாடு செயலிழப்புக்குள்ளான சிறுமிக்கு உயா் சிகிச்சையளித்து காப்பாற்றிய அரசு மருத்துவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

சிறுநீா்க் கட்டுப்பாட்டு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ரூ. 25 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை அளித்துள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்.

Advertisement

இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயா்தர சிகிச்சையை உறுதிசெய்ய, திமுக 2.0 ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும். அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள், தஞ்சாவூா், தருமபுரி, விழுப்புரத்தில் உயா்சிறப்பு மருத்துவமனைகள், மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.

மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் பதிவிட்டுள்ளாா்.