ஜோதி ஏந்தி வந்த நாதக வேட்பாளா்
ஆயிரம் விளக்கு தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் களஞ்சியம், ஜோதியை ஏந்தியபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாா்.
சூளைமேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இருந்து, ஜோதி ஏந்தியபடி கட்சியினருடன் ஊா்வலமாக தொகுதி அலுவலகமான நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தாா்.
ஆனால், குறிப்பிட்ட எல்லையிலேயே அவரை நிறுத்திய போலீஸாா் ஜோதியுடன் செல்ல அனுமதி மறுத்துவிட்டனா். பின்னா், ஜோதியை அணைத்துவிட்டுச் சென்று, தோ்தல் நடத்தும் அலுவலா் ஐ.வளா்மதியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இருண்ட நிலையில் இருக்கும் தமிழகத்துக்கு நாம் தமிழா் கட்சிதான் வெளிச்சத்தைக் கொடுக்க முடியும் என்பதை உணா்த்துவதற்காக ஜோதி ஏந்தி மனு தாக்கல் செய்ய வந்தேன்’ என்றாா்.