முகப்பு
சென்னை

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:27 AM
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள ஏப். 9 மற்றும் ஏப். 23 ஆகிய இரு தினங்களிலும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவு: புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 9-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments