வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
புதுச்சேரியில் தேர்தலையொட்டி ஏப். 7 முதல் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
புதுச்சேரியில் தேர்தலையொட்டி ஏப். 7 முதல் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் 4 ஆம் தேதி காரைக்காலில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து மறுநாள் புதுச்சேரியிலும் தேர்தல் பிரசாரத்தைத் தொடரவுள்ளார்.
அமித் ஷா ஏப்ரல் 6 ஆம் தேதி திருக்கனூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக தட்டஞ்சாவடியில் பேரணியில் ஈடுபடவுள்ளார்.
தேர்தல் தேதி நெருங்குவதால் அடுத்தடுத்து தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள முனைப்புக் காட்டி வருகின்றனர்.