முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் தேர்தல்: ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Updated On : 25 மார்ச் 2026, 10:12 pm IST
- Center-Center-Trivandrum
பகிர்:

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 126ஏ உட்பிரிவு 1-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ஏப். 9 காலை 7 மணி முதல் ஏப். 29 மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்ளவும் வெளியிடவும் அல்லது அச்சு ஊடகம் அல்லது டிஜிட்டல் ஊடகம் அல்லது இதர வழிகளில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. 126 தொகுதிகளை உள்ளடக்கிய அஸ்ஸாம் பேரவைக்கு வரும் ப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

summary

ECI bans displaying Exit Polls from April 9 to 29 for upcoming Assam polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.