அஸ்ஸாம் தேர்தல்: ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 126ஏ உட்பிரிவு 1-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ஏப். 9 காலை 7 மணி முதல் ஏப். 29 மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்ளவும் வெளியிடவும் அல்லது அச்சு ஊடகம் அல்லது டிஜிட்டல் ஊடகம் அல்லது இதர வழிகளில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. 126 தொகுதிகளை உள்ளடக்கிய அஸ்ஸாம் பேரவைக்கு வரும் ப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
ECI bans displaying Exit Polls from April 9 to 29 for upcoming Assam polls
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.