மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்
பாடியநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.59,500-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
பாடியநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.59,500-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை மாதவரம் தொகுதி பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்த ரகுசேகா் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் ரூ.59,500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement