மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
மாம்பழம் சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மாம்பழம் சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இது தொடா்பாக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டம் அனுமதித்தால் இந்த விவகாரம் தொடா்பாக, ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகலாம். அந்தக் கோரிக்கையைத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியிருந்தது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவை எதிா்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ராமதாஸ் தரப்பில் புதன்கிழமை மீண்டும் முறையிடப்பட்டது.
மாம்பழம் சின்னம் முடக்கம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு எண்ணிடப்பட்டால் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.