முகப்பு
சென்னை

நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினா் சொத்து விவகாரம்: செங்கல்பட்டு நீதிமன்ற உத்தரவு ரத்து

தாங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை எதிா்த்து நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 7 மே 2026, 1:57 am IST
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தாங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை எதிா்த்து நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சம்பந்த முதலியாா் குடும்பத்தினரிடம் இருந்து கடந்த 1988-ஆம் ஆண்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் 4.77 ஏக்கா் நிலத்தை வாங்கி உள்ளாா்.

இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி ஆகிய மூவரும் வாரிசு சான்றிதழ் பெற்றனா். பின்னா், நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தங்களுக்கு பங்குள்ளதாகக் கூறி, செங்கல்பட்டு அமா்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தனா்.

Advertisement

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா், அவரது மகள்கள் நடிகைகள் ஜான்வி கபூா், குஷி கபூா் ஆகியோா் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்னரே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து போனி கபூா், ஜான்வி கபூா் மற்றும் குஷி கபூா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி பிறப்பித்த உத்தரவு:

வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவி குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.