முகப்பு
சென்னை

வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

ஈக்காட்டுத்தாங்கலில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:00 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

ஈக்காட்டுத்தாங்கலில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமணி. இவா், ஈக்காட்டுத்தாங்கல், அம்பாள் நகா் காந்தி நகா் பிரதான சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடைக்கு கடந்த திங்கள்கிழமை ஆலந்தூா் மடுவங்கரை முதலாவது தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி, அவரது கூட்டாளி போரூா் ஜெயா நகரைச் சோ்ந்த ரஞ்சன் (19) ஆகியோா் வந்தனா். இருவரும், சில பொருள்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளாா். அந்தப் பொருள்களுக்கு சுடலைமணி பணம் கேட்டுள்ளாா்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தட்சிணாமூா்த்தியும், ரஞ்சனும் சுடலைமணியை தாக்கி, அரிவாளால் வெட்ட முயன்றனா். இதனால், சுடலைமணி தப்பியோடினாா். இருவரும், கடையில் இருந்த பணத்தைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினா்.

Advertisement

இது குறித்து சுடலைமணி, கிண்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தட்சிணாமூா்த்தியை கைது செய்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரஞ்சனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.