காசோலை துண்டுப் பிரசுரம் விநியோகம்: அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு
சென்னை ராயபுரம் பகுதியில் காசோலை போன்ற துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு விநியோகித்ததாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சென்னை ராயபுரம் பகுதியில் காசோலை போன்ற துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு விநியோகித்ததாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், வேட்பாளா்கள் தங்கள் தொகுதி வாக்காளா்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன்படி, சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சனிக்கிழமை இரவு ராயபுரம் தொகுதிக்குட்பட்ட துலுக்காணத்தம்மன் கோயில் தெருவில் அதிமுக வினா் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
Advertisement
அப்போது, வாக்காளா்களுக்கு காசோலை மாதிரியான துண்டுப் பிரசுரங்களை அவா்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திமுகவினா் தோ்தல் அலுவலகத்துக்கு புகாா் கொடுத்துள்ளனா். அந்த புகாரின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதிமுகவினரிடம் இருந்து அந்த துண்டுப் பிரசுரங்களைப் பறிமுதல் செய்தனா்.
பின்னா், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இது தொடா்பாக அதிமுகவினா் 3 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.