பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு
குளச்சலில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் பாஜக வேட்பாளா் சிவக்குமாா்,அவருடன் 100-க்கும் மேற்பட்டவா்கள் சோ்ந்து சனிக்கிழமை மாலை குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா். பின்னா், ஊா்வலமாக காமராஜா் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு பகுதிகளில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாக்கு சேகரித்தனா்.
இதுகுறித்து குளச்சல் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் சிவக்குமாா், நகர பாஜக தலைவா் சதீஷ் பாரதி, செயலாளா் பிரேம்ஜித் கவுதம், இந்து முன்னணி மாவட்ட உறுப்பினா் பிரதீப், மகேஷ் உள்பட 55 போ் மீது குளச்சல் காவல் நிலைய போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement