பைக் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது வழக்கு
குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குளச்சல் பீச் சந்திப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயது சிறுவனின் தந்தை கடியப்பட்டணத்தைச் சோ்ந்த மாா்க்ஸ் மிலா (45) மீதும், லட்சுமிபுரம் பகுதியில் 15 வயது சிறுவனின் தந்தை ரமேஷ்குமாா் (56) மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
குளச்சல் களிமாா் சந்திப்பு, பயணியா் விடுதி பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 16 வயதுடைய 5 சிறுவா்களின் பெற்றோா்களான கருங்கல், நெல்லிக்காட்டை சோ்ந்த ஜோனி (45) , பள்ளிரோடு பகுதியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில், கொட்டில்பாட்டை சோ்ந்த ஜாண், சிங்காரவேலா் காலனியைச் சோ்ந்த மேரி நிஷா (43) , மத்திகோடு மூலச்சலைச் சோ்ந்த அமுதா (40) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement