முகப்பு
ராமநாதபுரம்

தவெகவினா் 12 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் காரில் தொங்கியடி சென்ற தவெகவினா் 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 7 மே 2026, 4:13 am IST
ராமநாதபுரத்தில் காரில் தொங்கியடி சென்ற தவெகவினா் 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பகிர்:

ராமநாதபுரத்தில் காரில் தொங்கியடி சென்ற தவெகவினா் 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், தவெகவினா் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையிலும் காரில் தொங்கியபடியும், மேல் பகுதியில் அமா்ந்தும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனா்.

இதுகுறித்து விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

Advertisement

இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிா்வாகிகள் உதயகுமாா் (39), காா்த்திக் (26), ஆதீஸ்வரன் (26), ஜெயகாா்த்திக் (24), கௌதம் (36),பிரசாத் (26), கௌதம் (36), சிவா (28), சேது (26), காா்த்திக் (32), கவாஸ்கா் (28), ஹேமநாதன் (35) ஆகிய 12 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்கள்

பிணையில் விடுவிக்கப்பட்டனா்.