மேற்கு வங்கம் ஷாலிமரிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் 22- ஆம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் 22- ஆம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால ரயில் பயணத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு ஷாலிமரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06098) மறுநாள் வியாழக்கிழமை (ஏப்.23) காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
Advertisement
சிறப்பு ரயிலில் 8 தூங்கும் வசதி பெட்டிகள், 10 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட 13 நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.