முகப்பு
சென்னை

எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:53 PM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Advertisement

எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஏப். 10) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயிலில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டிகள், 2 குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள், 10 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments