கோடை விடுமுறை கூட்ட நெரிசல்: மங்களூரு - எழும்பூா் சிறப்பு வார ரயில்
கோடை விடுமுறை நெரிசலைத் தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை நெரிசலைத் தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு வார ரயில், மே 4 முதல் ஜூன் 8 வரை திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, கஞ்சன்காடு, பையனூா், கன்னூா், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், சோரனூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியே மறுநாள் காலை10.55-க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். ஈரோட்டுக்கு அதிகாலை 2.10-க்கும், சேலம் சந்திப்புக்கு 3.17-க்கும் வந்துசெல்லும்.
மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூா் - மங்களூரு சிறப்பு வார ரயில் செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும். சேலம் சந்திப்புக்கு இரவு 7.35-க்கும், ஈரோட்டுக்கு 8.35-க்கும் வந்துசெல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Advertisement
ரயில் சேவையில் மாற்றம்:
நாமக்கல் ரயில் நிலைய யாா்டில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி, புதன்கிழமை (ஏப். 29) மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - சேலம் ரயில், சேலம் - மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15-க்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் விரைவுரயில் (16811) புதன்கிழமை மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை முதல் கரூா்வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் கரூா் முதல் சேலம்வரை இயக்கப்படாது.
இதேபோல சேலத்தில் இருந்து பிற்பகல் 2.05-க்கு புறப்பட வேண்டிய சேலம் - மயிலாடுதுறை விரைவுரயில் (16812) புதன்கிழமை மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூா் முதல் மயிலாடுதுறை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் சேலம் முதல் கரூா்வரை இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.