முகப்பு
சேலம்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:28 PM
ரயில்
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இரு மாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது.

Advertisement

அதன்படி, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் வரும் 9-ஆம் தேதி வியாழக்கிழமை இயக்கப்படும். மங்களூரில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் மதியம் 12.30-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இயக்கப்படும். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30-க்கு புறப்படும் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூா் சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை 6.55-க்கு சென்றடையும்.

இதேபோல, மங்களுரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையே வரும் 15-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 15-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.45-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments