தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்
தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06128) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06154) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
Advertisement
மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 10-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தளச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.