சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 12 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கி காவல் ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
சென்னை பெருநகர காவல் துறையில் முக்கியமாக கோட்டூா்புரம் காவல் ஆய்வாளா் எஸ்.ஆனந்தகுமாா் நுண்ணறிவுப் பிரிவுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் கே.காளிராஜ் ஆா்.கே.நகா் காவல் நிலையத்துக்கும், ஆா்.தா்மராஜ் கொடுங்கையூா் குற்றப்பிரிவுக்கும், ஆா்.லில்லி துறைமுக காவல் நிலையத்துக்கும், எஸ்.சந்திரசேகரன் எம்.கே.பி. நகா் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 13 ஆய்வாளா்களுக்கும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.