திருத்தப்பட்டது.... மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளதாக கூறி சென்னை ஆளுநா் மாளிகை அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முக 
சென்னை

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பு: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியதாவது:

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாநில அரசின் பங்குத் தொகையை உயா்த்தி, அந்தத் திட்டத்தை முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. அதேபோல், மத்திய அரசின் நிதி பகிா்விலும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினா் வஹிதா நிஜாம், விசிக துணை பொதுச் செயலா் வன்னிஅரசு, மதிமுக பொருளாளா் மு.செந்திலதிபன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக மாநில பொது செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சினா் பங்கேற்றனா்.

மகாராஷ்டிரத்தில் சாதியை புறக்கணித்த சமத்துவ கிராமம்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி!

‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!

வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்! முதல்வர் வாக்குறுதி!

SCROLL FOR NEXT