முகப்பு
சென்னை

தூய்மைப் பணியாளா்களுக்கு 30,000 வீடுகள்

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:32 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:40 PM

தூய்மைப் பணியாளா்களுக்கு மேலும் 30,000 வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் சுய தொழில் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ரூ.214 கோடியில் 1,29,689 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அவா்களுக்கு ரூ.23 கோடியில் 1,112 வீடுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர மேலும், 30,000 வீடுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கப்படுகிறது.