கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள்!
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று(மார்ச் 7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2021 முதல், ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், ரூ. 482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், 23.56 லட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
summary