சென்னை

அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்: ஏலக்கேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்

தமிழக அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், ஏலகேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்.

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், ஏலகேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்.

இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி மதிப்பிலான 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.12 சதவீத பிணையப் பத்திரங்கள்(2032-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்), மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான 7.44 சதவீத பிணையப் பத்திரங்கள்(2055-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.24-இல் நடைபெறுகிறது. இதற்கான போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30-க்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11-க்குள்ளும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் பிப்.24 ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

கர்நாடகம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பாஜக எம்எல்ஏ கைது!

6, 6, 6, 6.. கார்லஸ் பிராத்வெய்ட் ருத்ரதாண்டவம்.. மே.இ.தீவுகளின் மறக்க முடியாத உலகக் கோப்பை! 2016 ரீவைண்ட்!!

”காவி மயமாகும் அதிமுக!” திருமா விமர்சனம்! | VCK | ADMK | DMK

மதுரை என்றாலே வீரம், பாசம், கோயில், சாப்பாடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT