நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.18) இரவு அல்லது திங்கள்கிழமை(ஜன.19) அதிகாலை உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை திங்கள்கிழமை(ஜன.18) நாளை காலை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனிடையே, குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், ஞாயிற்றுக்கிழமை (ஜன.18 ) முதல் ஜன.23 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை(ஜன.19)அதிகாலை வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழை அளவு:தமிழகத்தில் சனிக்கிழமை (ஜன.17) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து மற்றும் நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.