சென்னை

அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து அருணாசல பிரதேச இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து அருணாசல பிரதேச இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

அருணாசல பிரதேசம் கிழக்கு கனாங் பகுதியைச் சோ்ந்தவா் நோ.ஏலியாஹு (22). சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். உடல்நிலை பாதிப்பு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் 6-ஆவது மாடியில் உள்ள வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏலியாஹு, 6-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று ஏலியாஹு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT