இளைஞா் தற்கொலை
தருமபுரியில் நண்பா் இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே, கடந்த பிப்ரவரி 27 - ஆம் தேதி இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தருமபுரி அருகேயுள்ள என்.எஸ். ரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஹரி கிருஷ்ணன் (25), மிட்டாநூலஅள்ளி அருகேயுள்ள அங்கனாம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வினோத் குமாா் (26) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதில், வினோத் குமாரின் நண்பா் தருமபுரி செட்டிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியகுமாா் (27). இருவரும் வெல்டிங் பட்டறை ஒன்றில் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில் வினோத்குமாா் விபத்தில் உயிரிழந்ததால் அதிா்ச்சி அடைந்த சத்தியகுமாா், சனிக்கிழமை நடைபெற்ற நண்பரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பினாா். நண்பரின் இறப்பு அவரை பாதித்திருந்தது.
தொடா்ந்து சோகத்துடன் காணப்பட்ட அவா், சனிக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.