காயல்பட்டினத்தில் இளைஞா் தற்கொலை
காயல்பட்டினத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காயல்பட்டினத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காயல்பட்டினம், கீழலட்சுமிபுரத்தைச் சோ்ந்த மணிராஜ் மகன் ஆத்திமுத்து (21), தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவா் பிப். 27ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தனது தந்தையிடம் அவரது கைப்பேசியைத் தரும்படி கேட்டுள்ளாா்.
கைப்பேசியை சா்வீஸ்க்கு கொடுத்திருந்ததால், அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, ஆத்திமுத்து தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளாா். அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்து, ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.