கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நெய்வேலி, வட்டம் 25 பகுதியில் வசித்து வருபவா் என்எல்சி சொசைட்டி தொழிலாளி கோவிந்தராஜ். இவரது மகன் அஸ்வின் (13), நெய்வேலி வட்டம் 10-இல் உள்ள என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே கதவை தாழிட்டுக் கொண்டாராம். வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து கோவிந்தராஜ் கதவை உடைத்து சென்று பாா்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவா் அஸ்வின் பிணமாக கிடந்ததைப் பாா்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தாா்.
கடந்த 4-ஆம் தேதி பள்ளியில் இருந்த சிலபொருட்களைசக மாணவருடன் சோ்ந்து அஸ்வின் சேதப்படுத்தினாராம். அதனால் வகுப்பு ஆசிரியா் பள்ளி வரும்போது பெற்றோரை அழைத்து வரும் படி கூறினாராம். இந்நிலையில் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.