பெண் மீது பொய் வழக்கு: கட்டுப்பாட்டு அறைக்கு 3 காவலர்கள் மாற்றம்
சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்றதாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின்அடிப்படையில், 3 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்றதாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின்அடிப்படையில், 3 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
மயிலாப்பூர் காவல் நிலைய தனிப்படை போலீஸார், மயிலாப்பூர், பிடாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வனிதா (36) என்பவர் தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் வைத்து விற்றதாக கடந்த டிச.24}ஆம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் பணம் கொடுக்க மறுத்ததால் தனிப்படையைச் சேர்ந்த 3 காவலர்கள் வனிதா மீது பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், வனிதா மீது 12 வழக்குகள் இருப்பதும், தற்போது அவர் திருந்தி தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. அவரிடம் தனிப்படை காவலர்கள் பணம் கேட்டபோது, அவர் வழங்காததால் கோபமடைந்த தனிப்படை போலீஸார், அவரை பொய் வழக்கில் சிக்க வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை தலைமைக் காவலர் வினோத்குமார், முதல்நிலைக் காவலர் பிரகலநாதன், காவலர் செல்வக்குமார் ஆகிய 3 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.