முகப்பு
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
சென்னை

சிறைத் தண்டனையை எதிா்த்து திமுக பேச்சாளா் மேல்முறையீட்டு மனு

தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

சென்னை

சிறைத் தண்டனையை எதிா்த்து திமுக பேச்சாளா் மேல்முறையீட்டு மனு

தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 8:52 PM
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
பகிர்:

தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

திமுக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி. கடந்த 2023-ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் இவா் பேசும்போது, தமிழக ஆளுநா் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தாா்.

இதுகுறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூா்த்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைவிதித்தது. இந்த உத்தரவை எதிா்த்து சிவாஜி கிருஷ்ணமூா்த்தி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், இந்த வழக்கில் எழும்பூா் நீதிமன்றம், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை முறையாக பரிசீலிக்காமல் தண்டனை வழங்கி உள்ளது. இந்த வழக்கும் அரசின் உரிய அனுமதி இல்லாமல் தொடரப்பட்டுள்ளது. மேலும், விமா்சனத்துக்கு உள்ளான தனிநபா்கள் யாரும் இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. காவல் துறை பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →