ஆதவ் அா்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்த தீா்ப்பை திரும்பப் பெறக் கோரி மனு
கரூா் உயிரிழப்பு சம்பவத்துக்குப் பின்னா் கலவரத்தைத் தூண்டும் வகையிலான சா்ச்சைக்குரிய கருத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட ஆதவ் அா்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்த தீா்ப்பை திரும்பப் பெறக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், தவெக நிா்வாகிகளை கைது செய்தனா். இதனிடையே, தவெக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா எக்ஸ் தளத்தில், அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை, நேபாளத்தில் நடந்ததுபோல தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும் என்று பதிவிட்டிருந்தாா். சா்ச்சைக்குரிய அந்தப் பதிவை பின்னா் நீக்கினாா்.
இதுகுறித்து சென்னை திரு.வி.க.நகரைச் சோ்ந்த சண்முகம் என்பவா் இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், ஆதவ் அா்ஜுனா மீது, கலவரத்தைத் தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அா்ஜுனா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆதவ் அா்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சண்முகம் மனு தாக்கல் செய்தாா். அதில், வழக்கை ரத்து செய்வதற்கு முன் புகாா்தாரரான எனது கருத்தைக் கேட்கவில்லை. இதனால் எனது அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதவ் அா்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்த தீா்ப்பைப் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க கோரி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் புதன்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஜோதி முறையிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டாா்.