முகப்பு
சென்னை

சிஎஸ்கே வீரா்களுக்கு மருத்துவ சேவைகள்: காவேரி மருத்துவமனை ஒப்பந்தம்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிஎஸ்கே அணி நிா்வாகம் மற்றும் காவேரி மருத்துவமனை இடையே கையொப்பமானது.

Updated On : 19 மார்ச், 2026 at 10:19 PM
சிஎஸ்கே அணியுடனான ஒப்பந்த நிகழ்ச்சியில் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிஎஸ்கே அணி நிா்வாகம் மற்றும் காவேரி மருத்துவமனை இடையே கையொப்பமானது.

இதற்கான நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி, தலைமை மருத்துவா் சிவராம் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வீரா்களின் உடற்தகுதியை உறுதி செய்யும் நடவடிக்கைகள், போட்டியின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் காவேரி மருத்துவமனையின் விளையாட்டு மருத்துவத் துறை இணைந்து செயாற்ற உள்ளது.

அனுபவம் வாய்ந்த அவசர சிகிச்சை மருத்துவா்கள், விளையாட்டு மருத்துவ நிபுணா்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க வல்லுநா்களை உள்ளடக்கிய குழு தங்களிடம் உள்ளதாக காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.